Saturday 27 April 2013

RESULT

12TH RESULT

MAY 9 -THURSDAY-10 AM

10TH RESULT

MAY 31 ST-FRIDAY

WEBSITE WILL BE ANNOUNCED LATER..........

TAMILNADU 12TH RESULT ANNOUNCEMENT WEBSITE


தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.

THE WEBSITES WILL BE SOON ANNOUNCED BY THE GOVERNMENT

WEBSITE ANNOUNCEMENT FOR TN 12TH RESULT


தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மாதம் 1–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி முடிந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 66 மையங்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றுடன் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை திருத்தி முடிக்கப்பட்ட பிளஸ்–2 விடைத்தாள்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மையங்களில் இருந்து சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எல்லா தேர்வு மையங்களில் இருந்தும் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்ட மதிப்பெண்கள் விவரம் அடங்கிய சி.டி.க்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு வந்தபிறகு டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களின் உண்மையான பதிவு எண்கள்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் முடிவதற்கு 20 நாட்கள் ஆகும் என்பதால் மே 10–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிந்துவிட்டது. மதிப்பெண் பட்டியல் தயாரித்து முடிந்ததும் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்று தேர்வுத்துறை தான் முடிவு செய்யும் என்றனர்.

TAMILNADU ENGINEERING GRADUATE SCHEME


பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் சேர முடிவை நோக்கி இருக்கும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை இப்போதே பெற்று தயாராக வைத்திருங்கள் என்று அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.




தமிழ்நாட்டில் 552 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் ஒற்றைச்சாளர முறையில் அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்கிறது.

இந்த கவுன்சிலிங்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. வருடந்தோறும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதுபோல பி.இ. படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 10–ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன்னதாக பி.இ. படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணாபல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் விநியோகிப்பது வழக்கம். அதுபோல இந்த வருடமும் பிளஸ்–2 தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாக விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன. ஆனால் அதற்கான தேதியை இன்னும் அண்ணாபல்கலைக்கழகம் வெளியிடவில்லை.

வழக்கமாக என்ஜினீயரிங் சேரும் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.

அதுபோல சுதந்திரபோராட்ட வீரர் வாரிசாக இருந்தால் அதற்குரிய சான்று, முன்னாள் ராணுவத்தினர் மகளாக, மகனாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, சொந்த நாட்டில் வசிப்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.

ஆனால் பலர் கவுன்சிலிங் நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். எனவே இப்போதே அந்த சான்றிதழ்களை தேவைப்படுபவர்கள் உரிய அதிகாரிகளிடம் பெற்று தயாராக வைத்திருக்கவேண்டும்.

இந்த அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் காளிராஜ், என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வேண்டுகோளாகவிடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்காக விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் தயாராக வைக்கப்பட இருக்கின்றன.

இந்த வருடமும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் என்ஜினீயரிங் படிப்பில்சேர இடம் கிடைக்கும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.